• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வாரியபொல விளக்க மறியற்சாலையை விருத்தி செய்தல்
- நாளாந்தம் சுமார் 500 கைதிகளை தடுத்து வைக்கும் வாரியபொல விளக்க மறியற்சாலையில் குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள்ள நீதிமன்றங்களுக்கு ஆற்றுப்படுத்தவேண்டிய சந்தேகநபர்களும் கைதிகளும் தடுத்து வைக்கப்படுவதோடு, இங்கு தடுத்துவைக்கப்படுவோருக்கு போதுமான இடவசதிகள் இல்லையென்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைவாக வாரியபொல விளக்க மறியற்சாலையை விருத்தி செய்வதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகளை நடுத்தவணைக்கால வரவுசெலவுத்திட்ட கட்டமைப்பிலிருந்து பெற்றுக் கொள்ளும் பொருட்டு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.