• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை பொலிஸ் விசேட அதிரடி படையணியின் கட்டுகுருந்த பயிற்சி பாடசாலையின் பயிற்சி வசதிகளை விருத்தி செய்தல்
- பொலிஸ் விசேட அதிரடி படையணியின் பிரதான பயிற்சி பாடசாலையாக களுத்துறை கட்டுகுருந்த பயிற்சி பாடசாலையானது பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இங்கு பயிற்சியளிக்கப்படும் சவால்மிக்க பயிற்சிகளின் போது எப்சலின் கோபுரத்தை (தடைகளின் மீது தடைகளை பாவித்து ஏறும் பயிற்சிக் கோபுரம்) பயன்படுத்தி கயிற்றின் உதவிக் கொண்டு மேலிருந்து கீழே இறங்குவதற்கும் மலைகள் ஏறுவதற்குமான பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது இதற்காக பயன்படுத்தப்பட்டுவரும் எப்சலின் கோபுரம் 31 வருடங்கள் பழமைவாய்ந்த ஒன்றாவதோடு, அதன் தாங்கும் சக்தி குறைவடைந்துள்ளமையினால் பயிற்சி நடவடிக்கைகளின் போது விபத்துகள் நேர்வதற்கு உள்ள ஆபத்தினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு சில சவால்மிக்க பயிற்சிகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஆதலால் நவீன வசதிகளுடன் கூடிய எப்சலின் கோபுரமொன்றை கட்டுகுருந்த பயிற்சி பாடசாலையில் துரிதமாக நிருமாணிக்கும் பொருட்டு பொது நிருவாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.