2018-07-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை மின்சார சட்டத்தை திருத்துதல் - புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலவளங்களின் ஊடாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தினை கொள்வனவு செய்யும் போது முகம் கொடுக்க நேரிடும் இடையூறுகளை தவிர்க்கும் நோக்கில், 2013 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க மின்சார சட்டத்தை திருத்தும் பொருட்டு வரையப்பட்டுள்ள சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |