2018-07-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய மருந்துகள் ஒழுங்குறுத்துகை அதிகாரசபைக்கு புதிய கட்டட மொன்றை நிருமாணித்தல் - தேசிய மருந்துகள் ஒழுங்குறுத்துகை அதிகாரசபையின் தரப்பாதுகாப்பு ஆய்வுகூடமொன்றையும் தலைமை அலுவலக கட்டடத்தையும் நிருமாணிப்பதற்காக திம்பிரிகஸ்யாய பிரதேசத்திலுள்ள 27.24 பேர்ச்சர்ஸ் விஸ்தீரணம் கொண்ட காணித் துண்டொன்றை ஒதுக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |