• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பிரதான உணவுகளை இரும்புச் சத்து மற்றும் போலிக் அமிலம் ஊடாக செறிவூட்டுவதன் மூலம் குருதிச் சோகையை தணித்தல்
- இரும்புச் சத்து குறைபாட்டினால் ஏற்படும் குருதிச்சோகை இலங்கையில் பிரதான சுகாதார பிரச்சினையொன்றாக மாறியுள்ளதோடு, குருதிச்சோகை காரணமாக சோர்வு, அலட்சியம் ஏற்படுவதன் மூலம் ஆள் ஒருவரின் செயற்றிறனையும் குறைக்கும். கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாடசாலை குழந்தைகளுக்கிடையில் குருதிச்சோகையை தடுப்பதற்கு இரும்புச் சத்து வில்லைகள் வழங்கும் செயற்பாடானது ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதேபோன்று இதற்கு மாற்று வழியாக பெரும்பாலும் பயன்படுத்தப்படும் உணவுகளுக்கு இரும்புச் சத்தினை சேர்ப்பதன் மூலம் குருதிச்சோகையை குறைத்து கொள்ள முடியுமென கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைவாக, அரிசி மற்றும் கோதுமை மா என்பவற்றுக்கு இரும்புச் சத்து மற்றும் போலிக் அமிலம் சேர்ப்பதன் மூலம் செறிவூட்டும் நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக உரிய அமைச்சுக்களின் உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய குழுவொன்றை தாபிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.