2018-07-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சிறிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குதல் (விடய இல.19) - இதற்கு முன்னர் பெற்றுள்ள கடன் தொகைகளை செலுத்த முடியாமையினால் தமது வியாபார செயற்பாடுகளின் நாளாந்த நிதி தேவைகளை ஈடு செய்து கொள்வதற்கு வங்கிகளின் ஊடாக நிதி பெற்றுக் கொள்ள முடியாமற் போயுள்ளதன் காரணத்தினால் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நிதி பிரச்சினைக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. ஆதலால், வங்கி கடன்களை மீளச் செலுத்தத் தவறிய சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்காது அரிசி ஆலை உரிமையாளர்களின் கூட்டுறவுச் சங்க சம்மேளனத்தின் ஊடாக கடன் வசதிகளை செய்து கொடுக்கும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |