2018-07-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
விமானப்படை தீயணைப்பு பிரிவை மீளத் தாபித்தல் - கொழும்பு டீ.ஆர்.விஜேவர்தன மாவத்தையில் தாபிக்கப்பட்டுள்ள இலங்கை விமானப்படை தீயணைப்பு பிரிவு கொழும்பு மாநகர சபை திட்டத்திற்கு அமைவாக வேறு இடமொன்றில் தாபிப்பதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, நாரஹேன்பிட்ட பிரதேசத்திலுள்ள பேக்கரியவத்த என்னும் காணியில் அரசாங்கத்துக்குச் சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் காணித்துண்டில் இந்த பிரிவை மீளத் தாபிக்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |