2018-07-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கிந்தொட்ட மற்றும் அம்பாறை பிரதேசங்களில் ஏற்பட்ட கலவரம் காரணமாக சேதமுற்ற சொத்துக்களுக்கும் வணக்கஸ்தலங்களுக்கும் நட்டஈடு வழங்குதல் - கடந்த ஆண்டில் கிந்தொட்டை பிரதேசத்திலும் இந்த ஆண்டில் அம்பாறை பிரதேசத்திலும் நிகழ்ந்த கலவர நிலைமை காரணமாக சேதமடைந்த சொத்துக்கள் உட்பட வணக்கஸ்தலங்களுக்கு நட்டஈடு செலுத்துவதற்காக இதையொத்த ஏனைய நிலைமைகளிலும் பயன்படுத்தப்பட்ட வழிமுறையினையும் பரிசீலனை செய்து நட்டஈடு செலுத்தும் பொருட்டு மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |