• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இரத்தினபுரி மற்றும் கிளிநொச்சி நீதிமன்ற கட்டடத்தொகுதிகளின் நிருமாணிப்பு
- இரத்தினபுரி மாவட்டத்தின் நீதிமன்ற நடவடிக்கைகளின் போது நிலவும் இடவசதியின்மை, அங்கு தற்போது நிலவும் கட்டடங்களின் தன்மை மற்றும் மண்சரிவு ஆபத்து போன்ற காரணங்களினால் இரத்தினபுரி நீதிமன்ற கட்டடத் தொகுதியின் நிருமாணிப்பு வேலைகளை துரிதமாக மேற்கொள்வதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதே போன்று கிளிநொச்சி நீதிமன்ற கட்டடத்தொகுதியையும் போதுமான உட்கட்டமைப்பு வசதிகளுடன் விரிவுபடுத்த வேண்டியுள்ளமையும் இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இரத்தினபுரி மற்றும் கிளிநொச்சி நீதிமன்ற கட்டடத்தொகுதிகளின் நிருமாணிப்பு வேலைகளுக்கான ஒப்பந்தத்தை மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு வழங்கும் பொருட்டு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.