• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொலன்னாவை அரசாங்க தொழிற்சாலையின் மின்கம்பி கட்டமைப்பை நவீனமயப்படுத்தல்
- அரசாங்கத்தின் பல்வேறுபட்ட நிறுவனங்களுக்குத் தேவையான விசேட வகையிலான பொறிமுறை செயற்பாடுகளுக்கான சேவைகளை வழங்கும் அரசாங்க தொழிற்சாலைத் திணைக்கத்திற்கு மின்சாரம் பெற்றுக் கொள்வதற்காக தற்போது பயன்படுத்தப்படும் நிலக்கீழ் குறைந்த வோல்ட் அளவைக் கொண்ட மின்கம்பி கட்டமைப்பை நவீனமயப்படுத்த வேண்டியுள்ளது. 34.6 மில்லியன் ரூபாவைக் கொண்ட செலவினை ஏற்று மேற்கொள்ளப்படவுள்ள இந்த கருத்திட்டத்தை செயற்படுத்தும் நோக்கத்திற்காக வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.