• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பசுமை வலுசக்தி அபிவிருத்தி மற்றும் வலுசக்தி வினைத்திறனை அதிகரிக்கும் முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம்
- பசுமை வலுசக்தி அபிவிருத்தி மற்றும் வலுசக்தி வினைத்திறனை அதிகரிக்கும் முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கொழும்பு B நெய்யரி உப நிலையத்தை நிருமாணித்தல், கொலன்னாவை மற்றும் கொழும்பு C உப நிலையங்கள் என்பவற்றிற்கு இடையே கேபள் ஊடாக மின்சாரத்தை பெற்றுக் கொள்தல் மற்றும் வௌியேற்றும் இணைப்பினை ஏற்படுத்துதல், கொலன்னாவை மற்றும் கொழும்பு C உப நிலையங்களை மேம்படுத்துதல் என்பவற்றுக்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 1,260.78 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s.Hyosung Corporation நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.