• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நில்வலா ஆற்றுப்படுகையைப் பாதுகாத்தல்
- மாத்தறை மாவட்டத்தில் கூடிய மழைவீழ்ச்சி கிடைக்கப் பெறும் கொட்டப்பொல மற்றும் பிட்டபத்தர பிரதேசங்கள் அடிக்கடி வௌ்ள நிலைமைக்கு உட்படும் பிரதேசங்களாகும். வௌ்ள நிலைமை காரணமாக உருவாகும் உயிர் மற்றும் உடைமைகளுக்கான சேதங்களை விட நில்வலா கங்கையின் கரைகளுக்கு , கங்கைக்கு குறுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள பாலங்களுக்கு மற்றும் கங்கைக்கு ஒருங்கிணைவாக செல்லும் வீதிகளுக்கும் சேதங்கள் விளைகின்றன. இந்த சேதங்களைக் குறைக்கும் பொருட்டு நில்வலா கங்கை கரைகளைப் புனரமைத்தல், கரைகளில் "மீ" மற்றும் "கும்புக்" போன்ற மரங்களை நடுதல் என்பதன் மூலம் அபிவிருத்தி செய்து பாதுகாப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பொருட்டு 62 மில்லியன் ரூபாவைக் கொண்ட முதலீட்டுடன் பிட்டபத்தரயிலிருந்து கொட்டபொல வரை நில்வலா கங்கை ஆற்றுப்படுகையை நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஒத்தாசையுடன் பாதுகாப்பும் பொருட்டு இளைஞர் அலுவல்கள், கருத்திட்ட முகாமைத்துவ மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.