• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
துன்புறுத்தல்களினால் பாதிக்கப்படுகின்ற பெண்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்காக தற்காலிக தங்குமிடங்களுக்கான வசதிகள்
- யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் மாத்தறை ஆகிய பிரதேசங்களிலுள்ள துன்புறுத்தல்களுக்கு ஆளான பெண்களுக்குப் பாதுகாப்பினை வழங்கும் பொருட்டு தாபிக்கப்பட்டுள்ள தற்காலிக தங்குமிடங்களை நிருவகிப்பதற்காக Women in Need மற்றும் Jaffna Social Action Center என்னும் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. இற்த நிலையத்தை முறையாக முகாமிக்கும் பொருட்டு தகைமை பெற்ற பதவியினரையும் தேவையான வேறு வசதிகளையும் அரசாங்கத்தினால் வழங்குவதற்கு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் (திருமதி) சந்திராணி பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.