• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கெக்கிராவ பொலிஸ் நிலையத்திற்கு புதிய கட்டத்தை நிருமாணித்தல்
- கெக்கிராவ பொலிஸ் நிலையம் 50 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் சுமார் 62,650 பொதுமக்களுக்கு சேவை வழங்கும் பொலிஸ் நிலையமொன்றாகும். 80 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இந்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுவதோடு, போதுமான இடவதிசயற்ற மிகப் பழமை வாய்ந்த கட்டடமொன்று இதன் பொருட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. பிரதேச மக்களுக்கு வினைத்திறன் மிக்க சேவையினை வழங்கும் நோக்கில் கெக்கிராவ பொலிஸ் நிலையத்திற்கு சகல வசதிகளுடன் கூடிய புதிய கட்டடமொன்றை நிருமாணிக்கும் பொருட்டு பொது நிருவாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.