2018-07-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கண்டி பலநோக்கு போக்குவரத்து அந்தலையொன்றை நிருமாணித்தல் - கண்டி நகரத்தில் பொது போக்குவரத்து சேவையின் தரத்தினை விருத்தி செய்யும் பொருட்டு கண்டி பலநோக்கு போக்குவரத்து அந்தலையொன்றை நிருமாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தின் மூலம் பாதிக்கப்படும் புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான கட்டடங்களை மீள் நிருமாணிக்கும் பொருட்டு நான்கு மற்றும் ஏழு மாடிகளைக் கொண்ட இரண்டு கட்டடங்களை நிருமாணிப்பதற்கும் ஶ்ரீ தலாதா மாளிகைக்கு வருகை தரம் யாத்திரிகர்களுக்கான வாகன தரிப்பிடமொன்றை நிருமாணிப்பதற்கும் தேவையான 1.460 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதியினை வழங்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |