2018-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கொக்குளாய் பாலத்தை நிருமாணித்தல் - கொக்குளாய் களப்பு ஊடாக புதிய பாலமொன்றையும் நுழைவுப் பாதையொன்றையும் நிருமாணிப்பதன் மூலம் திருகோணமலை உட்பட அதற்கண்மித்த பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு யாழ்ப்பாணம் பிரதேசத்திற்கு இலகுவாக செல்வதற்கும் முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை வரையான தூரத்தை சுமார் 80 கிலோமீற்றர்களால் குறைப்பதற்கும் இயலுமாகும். முல்லைத்தீவு - கொக்குளாய் - புல்மோட்டை பாதையின் கொக்குளாய் களப்பு ஊடாக கொக்குளாய் பாலம் மற்றும் அதன் நுழைவு பாதையை நிருமாணிப்பதற்கான கேள்வி சம்பந்தமாக 2014 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் செக் குடியரசின் Bilfinger MCE Slany s.r.o. நிறுவனத்துக்கு 48.8 மில்லியன் யூரோக்களைக் கொண்ட தொகைக்கு வழங்கும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினாலும் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹஷிம் அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |