• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலகுரக புகையிரத போக்குவரத்து கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
- கொழும்பு மாநகர பிரதேசத்தினுள் வினைத்திறன் மிக்கதும் பயனுள்ளதுமான பயணிகள் போக்குவரத்து சேவையொன்றை தாபிப்பதற்காக துரித போக்குவரத்து முறைமையொன்றை அறிமுகப்படுத்துவது மேல் மாகாண மாநகர பிரதான திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும். அதன்கீழ் 7 இலகுரக புகையிரத போக்குவரத்து பாதைகளை நிருமாணிப்பதற்கு திட்டமிடப் பட்டுள்ளதோடு, கொழும்பு கோட்டை பிரதேசத்தையும் பிரதான நகரங்களையும் இணைக்கும் பாதை மற்றும் பத்தரமுல்ல, மாலம்பே பிரதேசத்துக்கு செல்லும் பாதைகள் முன்னுரிமை பாதைகளாக இனங்காணப்பட்டுள்ளன.

இந்தப் பிரதேசத்தினுள் காணப்படும் அதிக சனத்தொகை காரணமாக இந்த பாதைகளை தூண்களின் மீது செல்லும் இலகுரக புகையிரத பாதைகள் இரண்டாக நிருமாணிப்பதற்கு இலங்கை அரசாங்கத்தினால் யப்பான் அரசாங்கத்திடமிருந்து நிதி உதவி கோரப்பட்டுள்ளது. இதற்கமைவாக, மாலம்பேயிலிருந்து கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள பல்மாதிரி போக்குவரத்து நிலையம் வரை 17 கிலோமீற்றர் நீளம் கொண்ட தரிப்பிடங்கள் 16 மற்றும் டிப்போ ஒன்றுடன் கூடிய இலகுரக புகையிரத போக்குவரத்து கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.