2018-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வெலிஓயாவில் இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களுக்கு புதிய வீடுகளை நிருமாணிக்கும் நிகழ்ச்சித்திட்டம் - வெலிஓயா பிரதேச செயலக பிரிவில் ஹலம்பவெவ, மாயாவெவ, சப்புமல்தென்ன, கஜபாபுர, ஹன்சவில, நாமல்புர போன்ற கிராமங்களில் வசித்து மோதல் காரணமாக இடம்பெயர்ந்த 1,000 குடும்பங்களின் வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக விசேட கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தின் கீழ் 1,084 வீடுகளை நிருமாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, 994 வீடுகளின் வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. தற்போது மீதி 90 வீடுகளினதும் வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்த கிராமங்களில் வசித்த மோதல் காரணமாக இந்தப் பிரதேசங்களை விட்டுச் சென்ற மேலும் 256 குடும்பங்கள் மீண்டும் கிராமங்களுக்கு வந்து குறைந்த வசதிகளின் கீழ் தற்காலிக வீடுகளில் குடியிருப்பதோடு, தங்களுடைய வீடுகளை நிருமாணித்துக் கொள்வதற்கு உதவுமாறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. இதற்கமைவாக, அவர்கள் சார்பிலும் மேற்போந்த வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வீடுகளை நிருமாணிக்கும் பொருட்டு வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |