2018-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பில் முப்படைகளினதும் முனைப்பான பங்களிப்பினை பெற்றுக் கொள்தல் - முதியோர்களையும் அதேபோன்று இளைஞர்களையும் உள் இழுத்து நாட்டில் வேகமாக பரவும் போதைப்பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதற்கு இலங்கை பொலிசின் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தை முதன்மையாகக் கொண்டு, இலங்கை பொலிசின் ஊடாக பாரிய பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றதோடு, தேவையான சந்தர்ப்பங்களில் இதன் பொருட்டு பொலிஸ் விசேட படையினதும் முப்படையணியினதும் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்படும். போதைப்பொருள் வியாபாரத்தை வெற்றிகரமாக இல்லாதொழிப்பதற்கு முப்படையினதும் நேரடி பங்களிப்பு கூடுதலாக பெற்றுக் கொள்ளும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக போதைப்பொருள் அச்சுறுத்தலை வெற்றிகரமாக கட்டுப்படுத்துவதற்கு குறிப்பிட்ட காலப்பகுதிக்கு சட்டமா அதிபரினால் சிபாரிசு செய்யப்படும் சில அதிகாரங்களை முப்படையினருக்கு கையளிக்கும் விதத்தில் போதைப்பொருள் கட்டுப்பாடு பற்றிய விசேட ஏற்பாடுகள் சட்டமொன்றை வரையும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினாலும் பொது நிருவாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |