2018-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சுகாதார துறையில் ஒத்துழைப்புடன் செயலாற்றுவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கும் பின்லாந்து குடியரசிற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளல் - சுகாதார துறை தொடர்புபட்ட நடவடிக்கைகளின் போது டிஜிட்டல் தொழினுட்பத்தை பயன்படுத்துதல், தரவு சுகாதார உதவி, மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்களையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் விருத்தி செய்தல், மரபணுவியல், குருதி உயிரியற் பொருள்களை கூறாக பிரித்தல், சிகிச்சைகள், மருத்துவ மற்றும் சுகாதார உதவிக் கல்வி அத்துடன் தொற்றாத நோய்கள் போன்ற சுகாதார துறைகளில் ஒத்துழைப்புடன் செயலாற்றுவதற்காக இலங்கையின் சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சுக்கும் பின்லாந்து குடியரசின் சமூக அலுவல்கள் மற்றும் சுகாதார அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று செய்து கொள்ளப்பட்டமை சார்பில் சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |