• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு புகையிரத கட்டுப்பாட்டு நிலையத்தையும் புகையிரத செயற்பாட்டு தலைமையகத்தையும் நிருமாணித்தல்
- கொழும்பு மற்றும் அதற்கண்மித்த பிரதேசங்களில் புகையிரத சேவையினை விருத்தி செய்யும் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் செயற்படுத்தப்படும் புகையிரத வினைத்திறன் மேம்பாட்டுக் கருத்திட்டத்தின் கீழ் (CSREIP) கொழும்பு புகையிரத கட்டுப்பாட்டு நிலையத்தையும் புகையிரத செயற்பாட்டு தலைமையகத்தையும் நிருமாணிப்பதற்கும் அவற்றின் தொழினுட்ப வசதிகளை விருத்திசெய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ள மருதானை பிததேசத்தில் உள்ள ஏக்கர் 01 றூட் 02 விஸ்தீரணம் கொண்ட காணியினை இலங்கை புகையிரத சேவைக்காக ஒதுக்கிக் கொள்ளும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.