• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க காணிகளுக்கு கொடைப்பத்திரங்களை வழங்கும் துரித நிகழ்ச்சித்திட்டம்
- மக்களின் காணி உரிமையை பாதுகாப்பதற்கு அரசாங்கத்தினால் இதுவரை காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் பதினாறு இலட்சத்துக்கு மேலான காணி உரிமப்பத்திரங்கள் வழங்கப் பட்டுள்ளதோடு, இவற்றுள் 930.082 உரிமப்பத்திரங்கள் கொடைப்பத்திரங்களாக மாற்றப்பட்டுள்ளன. ஆயினும், உரிமப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ள மேலும் சுமார் 700,000 காணித் துண்டுகளுக்கும் ஜயபூமி உரிமப்பத்திரங்களின் கீழ் வழங்கப்பட்டுள்ள சுமார் 436,992 காணித் துண்டுகளுக்கும் காணி கொடைப்பத்திரங்கள் வழங்கப்பட வேண்டியுள்ளதோடு, அதன் பொருட்டு இந்த காணித் துண்டுகளை அளவிட வேண்டியுள்ளது. இதற்கமைவாக, பதினொரு இலட்சம் காணித் துண்டுகள் சார்பில் கொடைப்பத்திரங்களை வழங்குவதற்கான துரித நிகழ்ச்சித்திட்டமொன்றை 2019/2020 காலப்பகுதிக்குள் நடைமுறைப் படுத்துவதற்கும் இதற்குத் தேவையான வசதிகளை ஏற்பாடு செய்வதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினாலும் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.