• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
'கம்பெரலிய' - துரித கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் - 2018 - 2019
- அண்மைய ஆண்டுகளில் முகம் கொடுக்க நேர்ந்த காலநிலை அனர்த்தங்கள் காரணமாக நாடு முழுவதும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்பட்ட சேதம் உட்பட பல்வேறுப்பட்ட காரணங்களினால் வழமையான பொருளாதார வளர்ச்சி வேகத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவாக பெரும்பாலானோருக்கு அவர்களுடைய வாழ்வாதார அபிவிருத்தி செயற்பாடுகளின் போது சில பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கவேண்டி வந்துள்ளது. ஆதலால், மக்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு துரிதமாக நடவடிக்கைகளை எடுக்கும் தேவையும் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்வதன் மூலமும் பொருளாதார வளர்ச்சியினை துரிதப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் பொருட்டு இலங்கையின் சகல மாவட்டங்களையும் தழுவும் விதத்தில் நீர்ப்பாசன, கிராமிய வீதிகள், பாடசாலை துப்பரவேற்பாட்டு வசதிகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள், வாராந்த சந்தைகள், பசுமை பூங்காக்கள், மின்சாரம், மத மற்றும் தொல்பொருளியல் இடங்களின் திருத்த வேலைகள், வீடமைப்பு அபிவிருத்தி, காணி உறுதிகளை வழங்குதல், தொழில்முயற்சிகள் போன்ற துறைகளை அபிவிருத்தி செய்வதற்காக 'கம்பெரலிய' என்னும் துரித கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, உத்தேச நிகழ்ச்சித்திட்டமானது 2018 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டிலிருந்து ஆரம்பிக்கும் இரண்டு வருட காலப்பகுதிக்கு நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு சார்பில் பிரதேச செயலக பிரிவு ஒவ்வொன்றுக்கும் 200 மில்லியன் ரூபா வீதம் அபிவிருத்தி நோக்கங்களுக்காக வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான மொத்த முதலீடு 65,811 மில்லியன் ரூபாவாகும் இதற்கமைவாக, உத்தேச 'கம்பெரலிய' கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.