2018-07-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் சுகாதாரத்தினை மேம்படுத்துதல் - மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேசசெயலக பிரிவுகளை தழுவும் விதத்தில் 3,400 துப்பரவேற்பாட்டு அலகுகளை நிருமாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கு செலவாகுமென எதிர்பார்க்கப்படும் 300 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இந்த பிரதேசங்களில் சுகாதார பிரச்சினைகளையும் வறுமை மட்டத்தையும் குறைப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைவாக, இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு கடற்றொழில், நீரகவளமூல அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |