2018-07-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பொலன்நறுவை சூரிய சக்தி மூல மின் உற்பத்தி நிலைய கருத்திட்டம் - நிருமாணித்தல், உடைமையாக்கிக் கொள்ளல் மற்றும் நடாத்திச் செல்தல் என்னும் அடிப்படையில் 10 மெ.வொ. சூரிய சக்தி மூல மின் உற்பத்தி நிலையமொன்றை பொலன்நறுவை பிரதேசத்தில் தாபிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இந்த பிரதேசத்தில் பொருத்தமான காணியொன்றை கண்டறிவதற்கு இயலாமற் போயுள்ளமையினால் வாழைச்சேனை நெய்யறி துணைநிலையத்திற்கு அருகாமையில் இருக்கும் பொருத்தமான இடமொன்றில் இந்த மின் நிலையத்தை தாபிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவு குழுவின் சிபாரிசின் பிரகாரம் 10 மெ.வொ. சூரிய சக்தி மூல மின் உற்பத்தி நிலையமொன்றை நிருமாணித்தல், உடைமையாக்கிக் கொள்ளல் மற்றும் செயற்படுத்தல் என்பவற்றுக்கான கேள்வியை கிலோ வொட் மணித்தியாலம் ஒன்றுக்கு 12.49 மில்லியன் ரூபாவுக்கு M/s Didul (Pvt) Ltd. நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |