• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மோதல்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பில் நிரந்தர வீடுகளை வழங்குதல்
- வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மோதல்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பில் செங்கல் மற்றும் சீமெந்தினால் கட்டப்பட்ட பாரம்பரிய நிரந்தர வீடுகளை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, அமைச்சரவையினால் நியமனம் செய்யப்பட்ட இணக்கப் பேச்சுக் குழுவினதும் கருத்திட்ட குழுவினதும் சிபாரிசின் பிரகாரம் வீட்டு அலகொன்றை 1.25 மில்லியன் ரூபாவைக் கொண்ட வரியற்ற தொகைக்கு 25,000 வீடுகளை இந்த கருத்திட்டத்தின் I ஆம் கட்டத்தின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிருமாணிப்பதற்கும் இவற்றில் 15,000 வீடுகளின் நிருமாணிப்பு பணிகளை 2018 ஆம் ஆண்டில் ஆரம்பித்து 08 மாத காலப்பகுதிக்குள் பூர்த்தி செய்வதற்கும் மீதி 10,000 வீடுகளின் நிருமாணிப்பு பணிகளை 2019 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்வதற்கும் இந்த வீடுகளை நிருமாணிக்கும் கருத்திட்டத்திற்காக ஐக்கிய நாடுகளின் கருத்திட்டம் பற்றிய அலுவலகம் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித குடியேற்ற நிகழ்ச்சித்திட்டம் என்பவற்றை பிரதானமாக கொண்ட நிறுவனங்களுடன் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.