2018-07-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கையில் ஆரம்பக் கைத்தொழிலுக்கான தேசிய கொள்கையொன்றை வகுத்தமைத்தல் - முதலீட்டு ஊக்குவிப்பின் மூலம் ஏற்றுமதி வருமானத்தை விருத்தி செய்யும் அத்துடன் மக்களின் வாழ்வாதாரத்தை பலப்படுத்தும் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு ஆரம்பக் கைத்தொழில் துறையை முனைப்புடன் பங்குபெறச்செய்யும் நோக்கத்துடன் ஆரம்பக் கைத்தொழில் துறைக்கான தேசிய கொள்கையினை வகுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய கொள்கையின் ஊடாக ஆரம்பக் கைத்தொழில் துறையில் போட்டிகரமான நிலைமையையும், வினைத்திறனையும் மேம்படுத்துதல், ஆராய்ச்சி, அபிவிருத்தி மற்றும் தொழில்முயற்சி ஆற்றலை விருத்திசெய்தல், உலக சந்தை பங்கினை விருத்திசெய்தல், சந்தையை பல்வகைப்படுத்தல், ஏற்றுமதியை ஊக்குவித்தல் என்பவற்றின் மூலம் பொருளாதாரத்தையும் மேம்படுத்துவது நோக்கமாகும். இதற்கமைவாக சமூக நலன்புரி மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே அவர்களினால் ஆரம்பக் கைத்தொழிலுக்கான தேசிய கொள்கை அமைச்சரவை அறிந்துக் கொள்ளும் பொருட்டு சமர்ப்பிக்கப்பட்டது. |