• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்நாட்டு ஆயுள்வேத மூலிகை மருந்துகளை மாதிரிக் கிராமங்கள் மட்டத்தில் பயிர் செய்து ஆயுள்வேத மருந்து கூட்டுத்தாபனத்திற்கு விற்பனை செய்தல்
- வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் மாதிரி கிராம வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டமானது பயனாளி குடும்பங்களின் வீட்டுப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் அதேபோன்று அவர்களை பலப்படுத்துவதன் மூலம் உள்நாட்டு பொருளாதாரத்தில் பங்குதாரர்களாக மாற்றும் எதிர்பார்ப்புடனும் நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்டமொன்றாகும். இதற்கமைவாக 25 அலகுகளைக் கொண்ட மாதிரி கிராமம் ஒன்று சார்பில் வீடுகளுக்காக ஒதுக்கப்பட்ட காணித்துண்டுக்கு மேலதிகமாக 2 ஏக்கர் காணித்துண்டொன்று பயனாளிகளின் கூட்டு பயிர்செய்கை நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தற்போது பயனாளிகளுக்கு உரிமையாக்கப்பட்டுள்ள 77 மாதிரி கிராமங்களில் மூலிகைச் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, பூர்த்தி செய்யப்படவுள்ள உத்தேச 2,500 மாதிரி கிராமங்களுக்கும் மூலிகைச் செய்கையை அறிமுகப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் ஆயுள்வேத மருந்து இறக்குமதிக்காக செலவாகும் அந்நியச் செலாவணியை குறைப்பதற்கும் அதேபோன்று வீட்டு பயனாளிகளின் வருமான மட்டத்தை உயத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைவாக, மாதிரி கிராமங்களில் ஆயுள்வேத மூலிகை செய்கையை பிரபல்யப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தை மேம்படுத்துவதற்காக தொழிற்பாட்டு குழுவொன்றை தாபிக்கும் பொருட்டு வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.