2018-07-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அரசாங்க தொழிற்சாலை திணைக்களத்தை மறுசீரமைத்தல் - அரசாங்க தொழிற்சாலை திணைக்களமானது நீண்ட காலமாக அரசாங்கத்தின் அபிவிருத்தி பணிகளுக்கும் அரசாங்கத்தின் பல்வேறுபட்ட நிறுவனங்களுக்குத் தேவையான இயந்திர, பொறியியல் வேலைகள் மற்றும் பொருத்தல் பணிகள் போன்றவற்றை உயர் தரம் வாய்ந்ததாக செய்வதில் தேர்ச்சிமிக்க திணைக்களமொன்றாகும். இந்த திணைக்களத்தை மேலும் நிதி ரீதியில் சுயாதீனமான நிறுவனமொன்றாக நடாத்திச் செல்வதற்கு இயலுமாகும் வகையில் மீளமைப்பதற்கு சிபாரிசுகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டு குழுவொன்றை நியமிப்பதற்கும் உத்தேச மீளமைப்பு பணிகள் முடிவுறும் வரை அரசாங்க துறை சார்ந்த நிறுவனங்களுக்குத் தேவையான இயந்திர. பொறியியல் வேலைகள் மற்றும் பொருத்தல் வேலைகளை நேரடி ஒப்பந்த அடிப்படையில் அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களத்தைக் கொண்டு நிறைவேற்றிக் கொள்வதற்கான அதிகாரத்தை கையளிப்பதற்குமாக வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |