2018-07-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கைத்தொழில்களைத் தாபிப்பதற்காக பிராந்திய கைத்தொழில் பேட்டை களிலிருந்து காணித் துண்டுகளை குறித்தொதுக்குதல் - பிராந்திய மட்டத்தில் கைத்தொழில்களை மேம்படுத்துவதனை நோக்காக கொண்டு பிராந்திய கைத்தொழில் பேட்டைகள் தாபிக்கப்பட்டுள்ளதோடு, அவற்றில் தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கும் முதலீட்டாளர்கள் பிராந்திய கைத்தொழில் சேவைகள் குழுவினாலும் அமைச்சின் கருத்திட்ட மதிபீட்டு குழுவினாலும் தெரிவு செய்யப்படுவர். இந்த குழுக்களின் சிபாரிசுகளின் பிரகாரம் தெரிவு செய்யப்பட்ட முதலீட்டாளர்களுக்கு, இந்த கைத்தொழில்களின் ஊடாக உருவாகும் நேரடி தொழில்வாய்ப்பு உட்பட 4 பில்லியன் ரூபாவை விட அதிகமான முதலீட்டினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு 35 வருட கால குத்தகை அடிப்படையில் புத்தளம், நூராணி, பட்டஹத்த, நாலந்த, நாலந்த எல்லாவல, லக்ஷ உயன, ரைகம்புர, மில்லாவ ஆகிய கைத்தொழில் பேட்டைகளிலிருந்து காணித் துண்டுகளை குறித்தொதுக்கும் பொருட்டு கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |