• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சருவதேச நீர் சங்கத்தின் 2019 நீர், அபிவிருத்தி மாநாட்டையும் நீர் பாதுகாப்புக்கான நிலைபேறுடைய தீர்வு சம்பந்தமான கண்காட்சியையும் கொழும்பில் நடாத்துதல்
- சருவதேச நீர் சங்கத்தினால் இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை ஒழுங்கு செய்யப்படும் நீர், அபிவிருத்தி மாநாட்டையும் கண்காட்சியையும் 2019 ஆம் ஆண்டில் கொழும்பில் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டை இலங்கையில் நடாத்துவதன் மூலம் இந்த துறை சம்பந்தமாக அக்கறை காட்டுபவர்கள், நீர் மற்றும் சுற்றாடல் தொழில் சார்பாளர்கள், பொறியியலாளர்கள், இரசாயன வியலாளர்கள், ஒழுங்குறுத்துபவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோர்களின் தொழில் அபிவிருத்தியின் பொருட்டு ஈட்டிக்கொள்ளக்கூடிய நலன்கள் உட்பட இதன் ஊடாக வழங்கப்படும் சேவையை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு 2019 செப்ரெம்பர் மாதத்தில் நடாத்தப்படவுள்ள மேற்குறிப்பிட்ட சருவதேச மாநாட்டையும் கண்காட்சியையும் இலங்கையில் நடாத்துவதற்கு அனுசரணை வழங்கும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.