2018-07-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இனங்களுக்கிடையே தகவல்களை அறிந்துக் கொள்ளும் உரிமையினை ஊக்குவிப்பதற்கான கருத்திட்டம் - அரசுடைமை பொது அதிகார பீடங்களுக்கு சொந்தமான தகவல்களை மக்கள் பெற்றுக் கொள்வதற்கு 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல்களை அறிந்துக் கொள்ளும் உரிமை பற்றிய சட்டமானது தற்போது செயல்வலுவில் உள்ளது. இந்த சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்தியுள்ள தகவல்களை அறிந்துக் கொள்ளும் உரிமையானது மோதல் நிலவிய பிரதேசங்களிலும் கஷ்ட பிரதேசங்களிலும் வசிக்கும் மக்களுக்கிடையேயும் இந்த பிரதேசங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு இடையேயும் பிரபல்யப்படுத்துதல் தகவல்களை அறிந்துக் கொள்ளும் உரிமையினை பயன்படுத்துவது தொடர்பில் அவர்களுக்கு அறியச்செய்வித்தல் மற்றும் இது தொடர்பில் உத்தியோகத்தர்களை பயிற்றுவித்தல் என்பன பொருட்டிலான கருத்திட்டமொன்றை சுவிற்சர்லாந்து அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதியினைப் பயன்படுத்தி நடைமுறைப்படுத்தும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |