2018-07-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
துறைமுக நுழைவு அதிவேகப்பாதை கருத்திட்டத்தை செயற்படுத்துவதற்காக நிதி பெற்றுக் கொள்ளல் - கொழும்பு கட்டுநாயக்க அதிவேகப்பாதை, புதிய களனி பாலத்தின் ஊடாக கொழும்பு கோட்டை மற்றும் துறைமுகத்தை இணைக்கும் பொருட்டு தூண்களின் மீது செல்லும் துறைமுக நுழைவு அதிவேகப்பாதை கருத்திட்டமாக பிரேரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்று பிரதேசங்களில் தற்போது நிலவும் அதிக வாகன நெரிசல்களை குறைக்கவும் அதேபோன்று வர்த்தக போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கருதிட்டத்தின் கீழ் கொழும்பு துறைமுகத்திற்கு மட்டுமேயான விசேட நுழைவுப்பாதையுடன் புதிய களனி பாலத்திலிருந்து காலிமுகத்திடல் வரை 5.3 கிலோ மீற்றர் நீளமான தூண்களின் மீது செல்லும் துறைமுக நுழைவு அதிவேகப்பாதை நிருமாணிக்கப்படவுள்ளது. அதேபோன்று துறைமுக நுழைவுப்பாதையை பாதை வரிசைகள் ஆறாக அதிகரிப்பதற்கும் மின்னணு கட்டண சேகரிப்பு முறைமையொன்றை நிருமாணிப்பதற்கும் பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக இந்த நிருமாணிப்பு காரணமாக பாதிப்புகுள்ளாகும் துறைமுகத்துக்கு சொந்தமான 49 இடங்களை இடம் நகர்த்துவதற்கும் துறைமுக வசதிகளை வழங்கும் நிலையமொன்றை நிருமாணிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்பொருட்டு அரசாங்கம் 360.2 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட முதலீடொன்றை செய்வதற்கு எதிர்பார்க்கின்றது. இதில் 300 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட வௌிநாட்டு நிதி உதவியினை ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |