2018-07-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வட மாகாணத்தில் நிலையான மீன்பிடி அபிவிருத்தி கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதியினைப் பெற்றுக் கொள்ளல் - வட மாகாணத்தில் கடற்றொழில் துறையில் முதலீடுகளையும் தொழில்வாய்ப்புகளையும் மேம்படுத்தி இந்த மாகாணத்தில் மீன் உற்பத்தியை நிலையாக அதிகரிப்பதற்கு வட மாகாண நிலையான மீன்பிடி அபிவிருத்தி கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தின் கீழ் பருத்தித்துறையிலும் பேசாலையிலும் 02 கடற்றொழில் துறைமுகங்ளையும் யாழ்ப்பாணம் மண்டைதீவில் நங்கூரமிடும் இட மொன்றையும் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் 23 படகுத் துறைகளையும் நிருமாணிப்பதற்குத் திட்டமிடப் பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்திக்காக முல்லைத்தீவில் கடல் வௌ்ளரிக்காய் இனப்பெருக்க நிலையமொன்றையும் மன்னாரில் நண்டு இனப்பெருக்க நிலையமொன்றையும் யாழ்ப்பாணத்தில் கடல்தாவர நடுகை பொருட்கள் ஆய்வுகூடமொன்றையும் நிருமாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் அடங்கலாக பிரதேசவாழ் மக்களுக்கு உதவும் பொருட்டு இந்த கருத்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட 141 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்தல், கண்டல் தாவரங்களை மீண்டும் செய்கைபண்ணுவதற்கு உதவியளித்தல், கடன் வசதிகள் பற்றி அறியச் செய்வித்தல், தொழில்வாய்ப்புகளை உருவாக்குவதற்கு 03 மாதிரி கூட்டுத்தொழில்முயற்சிகளைத் தாபித்தல் மற்றும் நீண்டகால மோதல்கள் காரணமாக பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு உள - சமூக ஒத்தாசைகளை நல்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
இந்த கருத்திட்டத்திற்கு அரசாங்கத்தினால் வௌிநாட்டு நிதி உதவியுடன் 201.2 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட முதலீடொன்றை செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைவாக, இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான 174 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட வௌிநாட்டு நிதி உதவியினை ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவை யினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |