2018-07-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மத்திய அதிவேக பாதையின் பொத்துஹெரயிலிருந்து கலகெதர வரையான கட்டத்தை நிருமாணிக்க தேவையான நிதியைப் பெற்றுக் கொள்ளல் - தற்போதுள்ள அதிவேகபாதை வலையமைப்பை மேலும் விரிவுபடுத்தி பொத்துஹெர ஊடாக கொழும்பு மற்றும் கண்டியை இணைக்கும் நோக்கில் மத்திய அதிவேக பாதையை நிருமாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொருளாதார ரீதியாக முக்கித்துவம்வாய்ந்த துறைமுகம், விமானநிலையம் மற்றும் வர்த்தக நகரம் உட்பட பல மாகாணங்களை இணைத்து நாட்டின் தெற்கு பிரதேசத்திலிருந்து கண்டி வரை தொடர் இணைப்பினை ஏற்படுத்தும் மத்திய அதிவேக பாதையின் 3 ஆம் கட்டமான பொத்துஹெரயிலிருந்து கலகெதர வரையிலான 32.5 கிலோ மீற்றர் வரையிலான வீதிப் பகுதியயை யப்பான் வங்கிகளின் நிதியளிப்பின் கீழ் நிருமாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான 100 பில்லியன் யப்பான் யென்கள் கொண்ட நிதியினை ஏற்பாடு செய்து கொள்வதற்கு யப்பானின் MUFG, Ltd வங்கியுடன் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |