• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
"சுத்தமான வாயு 2025 செயற்திட்டம்" என்பதை செயற்படுத்தல்
- கொழும்பு நகர சுற்றுவட்ட வளிமண்டலத்தில் நிலவும் வளி மாசடைதலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறுபட்ட செயற்திட்டங்கள் அரசாங்கத்தினால் நீண்ட காலமாக செயற்படுத்தப்பட்டுள்ளன. வளியின் தரத்தை முகாமிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யும் நோக்கில் தாபிக்கப்பட்ட வளி வள முகாமைத்துவ மையத்தின் தலைமையில் "சுத்தமான வாயு 2000 செயற்திட்டம்" காலத்தின் தேவைகளுக்கேற்ப திருத்தங்களுடன் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆண்டினுள்ளும் இலங்கையின் வளி தொடர்புபட்ட நிலைமையை சிறந்த மட்டத்தில் பேணுவதனை முகாமிக்கும் நோக்கத்துடன் "சுத்தமான வாயு 2025 செயற்திட்டமானது" தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கும் அதற்கு தேவையான மேற்பார்வை மற்றும் ஒழுங்குறுத்துகை என்பன பொருட்டு வழிநடத்தல் குழுவொன்றையும் தொழினுட்ப குழுவொன்றையும் தாபிப்பதற்குமாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.