2018-06-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
எரிபொருள் விலைகளை இற்றைப்படுத்துவதற்கான குழு – எரிபொருள் விலைகள் சார்பில் செலவினை அடிப்படையாகக் கொண்ட விலைசூத்திரத்திமொன்றை அறிமுகப்படுத்துவதற்கும் 2018 மே மாதம் 11 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் விதத்தில் நடைமுறைப்படுத்துவதற்கும் முன்னைய இரண்டு மாதங்களில் சருவதேச விலைகளை அடிப்படையாகக் கொண்டு மூன்றாவது மாதத்தின் 05 ஆம் திகதியன்று எரிபொருள் விலையினை இற்றைப்படுத்துவதற்கும் அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த விலைசூத்திர முறையினை மிகுந்த வெளிப்படைத்தன்மைவாய்ந்ததாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு திறைசேரியினதும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சினதும் உத்தியோகத்தர்களைக் கொண்ட உத்தியோகப்பூர்வ குழுவொன்றை தாபிப்பதற்கும் இந்த குழுவினால் 03 மாதங்களுக்கு ஒரு தடவை 05 ஆம் திகதியன்றில் வாகனங்களுக்காக பயன்படுத்தப்படும் பெற்றோல் மற்றும் டீசல் விலைகளை இற்றைப்படுத்துவதற்குமாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |