2018-06-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வந்துரபீனு எல்ல நீர்வழங்கல் திட்டம் – குருநாகல் மாவட்டத்திற்கு குடிநீர் வழங்குவதற்கும் அதேபோன்று தெதுருஓயா சார்ந்து செயற்படும் ஏனைய சகல நீர்வழங்கல் திட்டங்களுக்குமான நீர் போசிப்பு நீர்த்தேக்கமாக பேணுவதற்கும் வந்துரபீனு எல்ல நீர்த்தேக்கத்தை நிருமாணிப்பது மிக பொருத்தமான மாற்று வழியென தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபை மேற்கொண்ட ஆய்வுக்கு அமைவாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க நிருமாணிப்பு சம்பந்தமாக சாத்தியத் தகவாய்வினை செய்வதற்கு இந்தியாவின் M/s Tata Projects Ltd. நிறுவனத்தினால் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக உரிய சாத்தியத் தகவாய்வு மேற்கொள்வதற்கு M/s Tata Projects Ltd. நிறுவனத்திற்கும் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபைக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |