• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய மதிப்பீட்டுக் கொள்கை
- அரசாங்கத்தினால் ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் சுமார் 1,300 பல்வேறுபட்ட அபிவிருத்தி கருத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதோடு, அவற்றில் 1/3 கருத்திட்டங்கள் 500 மில்லியன் ரூபாவுக்கு கூடுதலான செலவினை ஏற்று நடைமுறைப் படுத்தப்படும் பாரிய அளவிலான கருத்திட்டங்களாக இனங்காணலாம். இந்த கருத்திட்டங்களுக்கு மேலதிகமாக மாகாண, மாவட்ட, பிரதேச மற்றும் உள்ளூராட்சி மட்டங்களில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அபிவிருத்தி செயற்பாடுகள் பாரிய அளவில் செயற்படுத்தப்படுகின்றன. ஆயினும், இந்த அபிவிருத்தி கருத்திட்டங்களிலிருந்து கிடைக்கும் பெருபேறுகளை மதிப்பிடும் முறையான செயற்பாடொன்று இல்லாததன் காரணமாக அவற்றின் வினைத்திறன், இந்த கருத்திட்டத்தின் மூலம் மக்களின் வாழ்க்கை நிலைக்கு ஏற்படுத்திய தாக்கம் அல்லது அவற்றின் நீண்டகால பெருபேறுகள் தொடர்பில் உரிய ஆய்வுகளை செய்வது கடினமாகவுள்ளது. இதற்கமைவாக, இந்த நிலைமைக்கு மாற்று வழியாக உரிய தரப்பினர்களினதும் நிபுணர்களினதும் பங்களிப்புடன் வரையப்பட்டுள்ள தேசிய மதிப்பீட்டுக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் பொருட்டு இளைஞர் அலுவல்கள், கருத்திட்ட முகாமைத்துவ மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.