• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
களுத்துறை பொலிஸ் கல்லூரியின் நிருவாக பணிகளுக்காக நவீன வசதிகளுடன் கூடிய நான்கு (04) மாடி கட்டடமொன்றை நிருமாணித்தல்
- 209 ஏக்கர் விஸ்தீரனத்தில் பரந்துள்ள களுத்துறை பொலிஸ் கல்லூரியின் மூலம் பொலிஸ் கொன்ஸ்ரபில் பதவியிலிருந்து உதவி பொலிஸ் அத்தியட்சகர் பதவி வரை ஆண்டொன்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை பயிற்றுவிப்பதற்குத் தேவையான வசதிகள் வழங்கப்படுகின்றது. இந்த பயிற்சி பாடநெறிகளின் நிருவாக பணிகளுக்காக தற்போது பயன்படுத்தப்படும் குறைந்த வசதிகளுடன் கூடிய கட்டடத்துக்கு பதிலாக நவீன வசதிகளுடன் கூடிய கட்டடத்தை நிருமாணிப்பதற்கு தேவையான வசதிகளை வழங்கும் பொருட்டு பொது நிருவாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.