2018-06-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உத்தேச தல்பிட்டிகல நீர்த்தேக்க கருத்திட்டத்தின் திட்ட மீளாய்வு மற்றும் நிருமாணிப்பு பணிகளை மேற்பார்வை செய்தல் என்பன சார்பில் மதியுரைச் சேவைகளை பெற்றுக் கொள்ளல் - உமாஓயா பல்பணி கருத்திட்டத்தை நிருமாணிப்பதன் ஊடாக உமாஓயாவின் கீழ் பகுதியான பத்மெடில்ல திட்டத்தின் நீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு தல்பிட்டிகல நீர்த்தேக்க கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தின் திட்ட மீளாய்வு மற்றும் நிருமாணிப்பு பணிகளை மேற்பார்வை செய்தல் என்பன சார்பில் மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திடமிருந்து மதியுரைச் சேவைகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டு நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |