• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பௌத்த பிக்குனிகளுக்கான கல்வி நிறுவனங்களைத் தாபித்தல்
- இலங்கையில் தற்போது சுமார் 4,000 பௌத்த பிக்குனிமார்கள் உள்ளனர். இந்த பௌத்த பிக்குமார்களின் கல்வி நடவடிக்கைகளை அரசாங்கத்தின் உதவியின்றி தன்னார்வ அடிப்படையில் இயங்கும் ஒருசில கல்வி நிறுவனங்களின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நிறுவனங்களுக்குத் தேவையான உதவி மற்றும் அனுசரணை அரசாங்கத்தினால் வழங்கும் பொருட்டு 1979 ஆம் ஆண்டின் 64 ஆம் இலக்க பிரிவெனா கல்வி சட்டத்தை திருத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த சட்டம் திருத்தப்படும் வரை பௌத்த பிக்குமார்களின் கல்வியினை மேம்படுத்தும் பொருட்டு பௌத்த பிக்குனிமார்கள் கல்வி கற்கும் நிறுவனங்களை "பௌத்த பிக்குனிகளுக்கான கல்வி நிறுவனங்கள்" என்னும் பெயரில் பதிவு செய்து இந்த நிறுவனங்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்பாடு செய்யும் பொருட்டு கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.