2018-06-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக தாபன விதிக்கோவைக்குத் தேவையான திருத்தங்களைச் செய்தல் - 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் கீழ் அரசாங்க நிறுவனங்களுக்குச் சொந்தமான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்குவதானது 2017 பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வந்தது. அரசாங்க உத்தியோகத்தர்களினால் இந்த சட்டத்திலுள்ள ஏற்பாடுகளை நடைமுறைப் படுத்துகையில் பொதுமக்களுக்கு தகவல்களை வழங்குவது சம்பந்தமாக தாபன விதிக்கோவையில் இதுவரை நிலவிய ஏற்பாடுகளுக்கு சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமென கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைவாக, அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் கருத்துக்களையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, தாபனவிதிக் கோவையின் II ஆம் தொகுதியை திருத்துவதற்காக வரையப்பட்டுள்ள சுற்றறிக்கை அறிவுறுத்தல்களை வழங்கும் பொருட்டு பொது நிருவாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|