2018-06-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கொழும்பு கோட்டை CHALMER'S GRANARIES மனையிடத்தில் கலப்பு அபிவிருத்தி கருத்திட்டம் - கொழும்பு கோட்டை CHALMER'S GRANARIES காணியை கலப்பு அபிவிருத்தி கருத்திட்டமொன்றாக அபிவிருத்தி செய்யும் பொருட்டு அமைச்சரவையின் அங்கீகாரம் முன்னர் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க இக்கருத்திட்டம் சார்பில் பிரேரிப்புகள் கோரப்பட்டிருந்த போதிலும், உரிய திகதியிலேனும் முதலீட்டாளர்கள் பிரேரிப்புகளை சமர்ப்பித்திருக்கவில்லை. இந்நோக்கம் கருதி பிரேரிப்புக்கள் கோரப்பட்ட வேளையில் இக்கருத்திட்டத்தில் ஆர்வத்தைக் காட்டிய முதலீட்டாளர்களுடன் மேற்கொண்ட கலந்தாய்வுகளை கருத்திற்கொண்டு, கொழும்பு கோட்டையிலுள்ள CHALMER'S GRANARIES காணியானது கலப்பு அபிவிருத்தி கருத்திட்டங்களுக்காக பயன்படுத்தப்படும் போது காணியின் பெறுமதி கொடுப்பனவிற்காக மாற்றீடான பிரேரிப்புகளை சமர்ப்பிக்கும் சந்தர்ப்பத்தை வழங்கும் பொருட்டும் அத்தகைய பிரேரிப்புக்களை மதிப்பிடுவதற்கான செய்முறையொன்றை அறிமுகப்படுத்தும் பொருட்டும் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |