2018-06-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
விமானசேவைகள் தொடர்பாக இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையே நடாத்தப்பட்ட இருதரப்பு கலந்துரையாடல்கள் - இலங்கையினதும் தாய்லாந்தினதும் விமானசேவை அதிகாரிகளினால் கொழும்பில் 2017 ஆம் ஆண்டு திசெம்பர் மாதம் நடாத்தப்பட்ட சிவில் விமானசேவைகள் மாநாட்டில் இவ்விரு நாடுகளுக்கு இடையிலான விமானசேவைத் திட்டங்கள் குறித்து கலந்துரையாடல் நடாத்தப்பட்டது. இவ்விரு நாடுகளுக்கும் இடையில் இது தொடர்பில் கைச்சாத்திடப்படு வதற்குள்ள விமான சேவைகள் ஒப்பந்தம் குறித்து இரு தரப்பினரும் உடன்பாட்டை எட்டியுள்ளனர். அதற்கிணங்க, இவ் உடன்பாட்டை உத்தியோகபூர்வமாக செய்து கொள்ளும் பொருட்டும் அதனை பயனுறுதிவாய்ந்த விதத்தில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு பதில் போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அசோக்க அபேசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |