2018-06-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உள்நாட்டு விமான சேவைகளை மேம்படுத்துதல் - கொடுக்கப்பட்ட கால அட்டவணையொன்றுக்கு இணங்க அட்டவணைப்ப படுத்தப்பட்ட உள்நாட்டு விமான சேவைகளை கையாள்வதற்கு அரச - தனியார் பங்குடமைக்கான தேசிய முகவராண்மையினால் பிரேரிப்புக்களை கோரிய ஆர்வ வௌிப்படுத்தலுக்கு இணங்க, 05 நிறுவனங்கள் தமது பிரேரிப்புக்களை சமர்ப்பித்துள்ளதுடன் கூறப்பட்ட பிரேரிப்புக்களானவை சிவில் விமான சேவைகள் பணிப்பாளர் அதிபதி, அரச தனியார் பங்குடமைக்கான தேசிய முகவராண்மையின் தலைவர் மற்றும் விமான நிலைய, விமான சேவைகள் (இலங்கை) நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஆகியோரை உள்ளடக்கிய குழுவொன்றினால் மதிப்பிடப்பட்டுள்ளன. அதற்கிணங்க, கூறப்பட்ட குழுவின் சிபாரிசுகளுக்கிணங்க நடவடிக்கை எடுப்பதற்கு உட்பட்டு, தொழிற்பாட்டுச் செயற்பாடுகளுக்கான உரிமங்களை வழங்குவதற்காக உரிய விமான சேவைகள் நிறுவனங்களிட மிருந்து விண்ணப்பங்களைக் கோரும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினாலும் பதில் போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அசோக்க அபேசிங்க அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |