2018-06-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கையில் ஆறு (06) சிறிய பாற்பண்ணைகளை அபிவிருத்தி செய்தல் - கிராமப்புற பிரதேசங்களில் பச்சைப் பாலை உற்பத்தி செய்யும் ஆற்றலை அதிகரிப்பதற்கு ஊடாக பாற்பண்ணையாளர்களின் வருமான மட்டத்தை அதிகரிக்கும் எதிர்பார்ப்புடன் கடுவளை, அத்தனகல்ல, பொலன்நறுவை, மட்டக்களப்பு, வாரியப்பொல மற்றும் வென்னப்புவ ஆகிய பிரதேசங்களில் 30 பால் சேகரிப்பு நிலையங்களையும் 06 பால் பதப்படுத்தல் நிலையங்களையும் அபிவிருத்தி செய்தவதற்கு அவசியமான நிதியங்களை பெற்றுக் கொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |