2018-06-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பிபிலையிருந்து செங்கலடி வரை மற்றும் பதியத்தலாவையிலிருந்து டம்பிட்டிய வரையிலான வீதியை விருத்தி செய்தல் - பிபிலையிருந்து செங்கலடி வரை 86.75 கி.மீ நீளமான வீதிப் பகுதியை புனரமைத்து விருத்தி செய்வதற்கு அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தினால் கடன் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தின் கீழ் பின்வரும் 02 ஒப்பந்த பொதிகளை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகராம் Consulting Engineers & Contractors (Pvt.) Ltd. நிறுவனத்துக்கு வழங்கும் பொருட்டு நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹஷிம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது:
* பிபிலையிலிருந்து பதியத்தலாவ வரையிலான 29 கிலோ மீற்றர் கொண்ட வீதிப் பகுதியை 2,389.07 மில்லியன் ரூபாவில் புனரமைப்பதற்கும் விருத்தி செய்வதற்கும். * பதியத்தலாவையிலிருந்து டம்பிட்டிய வரையிலான 30 கிலோ மீற்றர் கொண்ட வீதிப் பகுதியை 2,295.63 மில்லியன் ரூபாவில் புனரமைப்பதற்கும் விருத்தி செய்வதற்கும். |