• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பேருவளை, அளுத்கமை பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவம் காரணமாக சேதமடைந்த சொத்துக்கள் சார்பில் விசேட நட்டஈடு வழங்குதல்
- களுத்துறை மாவட்டத்தின் பேருவளை மற்றும் அளுத்கமைபிரதேசங்களில் 2014 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மக்கள் கலவரம் காரணமாக சேதமடைந்த சொத்துக்களுக்கு நடைமுறையிலுள்ள ஒழுங்கு விதிகளின் கீழ் வழங்கக்கூடிய ஆகக்கூடிய நட்டஈட்டுத் தொகையினை வழங்குவதற்கு அரசாங்கத்தினால்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் இதன் மூலம் தழுவப்படாத வீட்டு மற்றும் ஏனைய உபகரணங்களுக்கு நிகழ்ந்த சேதங்களுக்குரியதாக மேலும் செலுத்த வேண்டுமெனமாவட்ட செயலாளரினால் நியமிக்கப்பட்டுள்ள விசேடமதிப்பீட்டு குழுவொன்றினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள கொடுப்பனவுகளை செய்வதற்கு இயலுமாகும் வகையில் 185.9 மில்லியன் ரூபாவை ஒதுக்கிக் கொள்ளும் பொருட்டு மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.