• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாதிரி கிராமங்களின் ஊடாக 'சம்பத் பியச' நிகழ்ச்சித்திட்டத்தைநடைமுறைப்படுத்துதல்
- வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் மாதிரி வீடமைப்பு கிராமங்கள் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வீடொன்றை நிருமாணித்துக் கொள்வதற்கு காணித் துண்டொன்று இல்லாத குறைந்த வருமானம் பெறும் அல்லது வறிய குடும்பங்களுக்கு காணியொன்றின், வீடொன்றின் குடியிருப்பொன்றின் உரிமையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஏற்கனவே மக்களின் உரிமைக்கு வழங்கப்பட்டுள்ள 75 மாதிரி கிராமங்களின் பயனாளிகளுக்கு போதைப்பொருள் தடுப்பு, சுகாதார மேம்பாடு மற்றும் வீட்டுத்தோட்டச் செய்கை போன்ற துறைகளில் முன்னேற்றத்தினை காண்பதற்கு இயலுமாகியுள்ளது. இந்த கிராமங்களில் ஒன்றுசேரும் உக்காத கழிவுகளை சுற்றாடல் நட்புறவு ரீதியில் அகற்றுவதற்கு இயலுமாகும் வகையில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'சம்பத் பியச' பிரிவானது சுகாதார பாதுகாப்பு பற்றிய சனாதிபதி செயலணியின் கையாள்கையின் கீழ் மாதிரிக் கிராமங்கள் ஒவ்வொன்றிலும் தாபிக்கும் பொருட்டு வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறைஅமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.